Madhuramakuthe - Lyrics

Singer: Pradeep Kumar

பாடல்: மதுரமாகுதே
இசை: அரோல் கரோலி
வரிகள்: சௌந்தரராஜன்
பாடியவர்: பிரதீப்குமார்
இயக்கம் : பரத் மோகன்

பல்லவி:

மதுரமாகுதே
எனது வானிலை
காரணம் ஏனடி...!

மனதில் ஆடுதே
மயக்கும் தாமரை
காரணம் ஏனடி...!

(மதுரமாகுதே..)

அனுபல்லவி:

ஓசைகள்
இன்றியே...
வார்த்தைகள்
கேட்குதே...
காரணம் என்னடி
என் காதிலே சொல்லடி...!

வாசமாய்
நெஞ்சிலே
சேர்கிறாய்
மீள்கிறேன்...
காரணம் என்னடி...
என் காதிலே சொல்லடி...!

(மதுரமாகுதே...)

சரணம்:

காற்றிலேறும்
இறகைப்போலவே
ஊஞ்சலாடி
நானும் போகிறேன்..!

கைகள் நீட்டி
ஏந்திக்கொள்ளவே
குழந்தையாகிறேன்...!

வெறுமை
நிரப்பும்
நொடிகள் தருகிறாய்..!
எனக்குள் புதிய
வெளிச்சம் பரவுதே..!

இனிப்பைச் சுமக்கும்
எறும்பைப் போலவே
எனது நாட்கள் நகருதே...!

ஓசைகள்
இன்றியே...
வார்த்தைகள்
கேட்குதே...
காரணம் என்னடி
என் காதிலே சொல்லடி..!

வாசமாய்
நெஞ்சிலே
சேர்கிறாய்
மீள்கிறேன்..
காரணம் என்னடி
என் காதிலே சொல்லடி..!

(மதுரமாகுதே..)